சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரப்போகும் அதிமுக எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் புதிய வருவாய் வட்டமாக மாற்ற அரசு முன்வருமா? என எம்எல்ஏ மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் புதூர், புதிய வருவாய் வட்டமாக மாற்றப்படும் என பதில் அளித்தார்.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியே கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget Meeting on Mar 22


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->