மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை - தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய், 1500 ரூபாய் கொடுத்து அவமானப்படுத்த வேண்டாம் என்றுm தமிழக அரசின் சமூக நலத்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.

மேலும், சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மற்ற 16 வகையானவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மட்டுமல்லாமல், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம்.

வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாத 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படுகிறது": என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து, சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு இல்லை என்றும்,  ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூன் 8 தள்ளிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Say About provision of scholarships to alternatively abled


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->