தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உறுதி மொழி! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சற்றுமுன் தொடங்கி நடந்து வருகிறது.

தவெக மாநாட்டில், கட்சியின் கொள்கை உறுதி மொழி வாசிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் உறுதி மொழி ஏற்பு வாசிக்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:

"நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் யாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். 

இந்திய அரசியலமைச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். 

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். 

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்" என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanaadu Vijay Uruthimozhi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->