முதலமைச்சர் பதவியை தொடர்ந்து முக்கிய பதவியை ராஜினாமா செய்யப் போகும் உத்தவ் தாக்கரே.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தமக்கு சுயேட்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே நேற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி உத்தரவு தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டார்.. இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.  இன்று நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

ஆளுநர் உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடையில்லை என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் 
'
இந்நிலையில், மகாராஷ்டிரா மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். சிவசேனாவில் தீவிர கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uddhav Thackeray may be resign council member


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->