சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது.!! - Seithipunal
Seithipunal


தென்காசி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் எல்லைக்கு உட்பட்ட மத்தளம்பாறையை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞர் எழுச்சி பாசறை துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி குணராமநல்லூர் பஞ்சாயத்து 15-ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். 

வீராச்சாமி இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வீராச்சாமியை கைது செய்தனர். 

பின்னர் அவர் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சமீப காலங்களாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck councilor arrested gor sexually harassment case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->