விக்கிரவாண்டியில் விஜய்!....மின் விளக்குகளால் ஜொலிக்கும் மாநாட்டு திடல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

விஜய்யின் கட்சி கொள்கை எந்த மாதிரி இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் இன்று மதியம் சென்னையில் இருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தருவார் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் திடீரென நேற்று மாலை 6 மணிக்கு தவெக தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு காரில் வருகை தந்து, அங்கு இருந்த கேரவனில் அவர்  சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து இரவு 9 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த அவர், அங்கு மாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பணிகளை  சுமார் 30 நிமிடம் ஆய்வு செய்தார்.  பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த உள்பட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்தினார்.

மேலும் மாநாட்டு திடல் நேற்று எரியும் மின் விளக்குகளால் ஜொலித்தது. அப்போது அங்கு திரண்ட தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay in vikravandi conference lit with electric lights


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->