சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு.!
july 16 today evening open to sabarimala temple
சபரிமலை ஐயப்பன் கோவில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் 19ஆம் தேதி பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.
ஐயப்பன் பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
july 16 today evening open to sabarimala temple