புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படியெல்லாம் வழிபடலாம்.?!
Punniyam Tharum purattasi vazhipadu for Perumal
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பவர்களுக்கு சுகமான வளமான வாழ்வு கிடைக்கும். இந்த காரணத்தால் புரட்டாசி மாதமானது 'பெருமாள் மாதம்" என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமை அன்று காகத்திற்கு ஆலை இலையில் எள்ளும், வெல்லமும் கலந்த சோறு வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும் என்று கூறுவார்கள்.
இந்த புரட்டாசி மாதத்தில் வருகின்ற விரதங்கள் புண்ணிய பலன்களை அதிகமாக தரும் என்று கூறுவார்க்ள். ஜேஷ்டா விரதம்,தசாவதார விரதம், மகாலட்சுமி விரதம், நவராத்திரி, லலிதா விரதம் உள்ளிட்ட விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடனும் வாங்கக் கூடாது. இருப்பினும் தான, தர்மங்கள் செய்யலாம்.
புரட்டாசி சனியில் விரதமிருந்தால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
சித்தி விநாயகருக்கு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இருக்காது.
புரட்டாசி சனிக்கிழமையில், தான் சனிபகவான் அவதரித்தார். எனவே, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை நாம் வழிபடுகிறோம்.
புரட்டாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை நினைத்து விரதம் இருந்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும், ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து, நெய்வேத்தியமாக இளநீர் படைத்தால், குடும்பத்திற்கு தேவையான செல்வங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
கடவுளுக்கு காணிக்கைகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்ததாக கருதப்படுகிறது.
கல்வித்தடை, பணப்பிரச்சனை, திருமணத்தடை, நோய், உள்ளவர்கள் புரட்டாசியில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளை வழிபட்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை மட்டுமல்லாமல் திங்கட்கிழமை மற்றும், புதன்கிழமையும் கூட பெருமாளை வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகளில் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடைய வைக்கலாம்.
English Summary
Punniyam Tharum purattasi vazhipadu for Perumal