மரண குத்து வாங்கிய பாகிஸ்தான்! உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்து இருப்பது பாகிஸ்தான் அணிக்கு இதுவே முதல்முறை.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களில் மிக மிக திரில்லிங்காக நடந்த ஆட்டம் என்றால் அது, பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டம் தான்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அலட்சியமாக ஆடிய பாகிஸ்தான் அணி, கடைசி 20 ஓவர்களில் கோதாவில் இறங்கியது. 

அதே போல தென்னாப்பிரிக்கா அணியும் இறுதிவரை பாகிஸ்தான் அணியுடன் சண்டை செய்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, அரையிறுதி செல்வதையும் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. 

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இது தொடர்ச்சியான 4-வது தோல்வி ஆகும். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுபோன்று தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும். 

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. 

பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றல் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளில் வெல்வதுடன், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளின் தோல்வியையும் ஏக்கத்துடன் பிராத்தனை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc world cup 2023 Pakistan sad


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->