#CSKvsRCB: தலைக்கு மேல் கத்தி..மழை பெய்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? - Seithipunal
Seithipunal


டாடா ஐபிஎல் 18-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை இயற்றியுள்ளது. இன்னும் ஒரு சில லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. 

இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்காவது அணி எது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. 

அடப்பா ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணி என்ற இடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இலையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

நாளை நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவருக்குள் சேசிங் செய்தாலும் விளையாட்டுக்கு நேரடியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தகுதி பெறும். இதன் காரணமாக நாளைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணையின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று அமைந்துள்ளது. இதன் காரணமாகஐபிஎல் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Play off chance to CSK RCB


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->