முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்!...ஜோதியுடன் இன்று கோலாகல தொடக்கம்!
Matches for chief minister trophy great starts today with jothi
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இன்று தொடங்கும் இந்த போட்டியானது, வரும் 24-ம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்ைட, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
குழு போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தலா ரூ.75 ஆயிரம், ரூ.50, ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்றும், போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Matches for chief minister trophy great starts today with jothi