இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நான்காவது இடம் பிடித்தவருமான கேரளாவைச் சேர்ந்த 58 வயதாகும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந்திய தேசிய விளையாட்டு சம்மேளங்களின் ஆதரவு பெற்று ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி உஷா தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் அவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறப் போகிறார். துணைத் தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்பமான தாக்கல் செய்துள்ளனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTUsha wiil be elect president of the Indian Olympic Association


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->