இந்தியா-தென்னாபிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில் ஷபாஷ் அகமது அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா தென்னாபிரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். அதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டியுள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டரான சபாஷ் அகமது அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shabash Ahamed debut against South Africa 2nd ODI


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->