மகளிர் டி20 உலகக்கோப்பை.. அரையிறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

இந்த நிலையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2  இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 24ஆம் தேதி) இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகள் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup semifinal match INDW vs AUSW


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->