06 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை; பள்ளியை சூறையாடி, சாலைமறியல் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


புதுசேரில் 06 வயது பள்ளி மாணவிக்கு, அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புனித ஜோசப் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் மத்தியில் கொந்தளித்து போய் உள்ளனர். ஆத்திரத்தில் மாணவியின் உறவினர்கள், பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

புனித ஜோசப் ஆங்கில மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  12ம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி ஆசிரியராக வேலை பார்க்கும் ஆசிரியர் மணிகண்டன் குறித்த பாலியல் குற்றத்தை செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் பரிசோதித்தபோது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் நடந்தவற்றை விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி பள்ளி செல்ல மாட்டேன் என அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது. பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்ற பெற்றோர்  நியாயம் கேட்டனர்.

அப்போது மணிகண்டன் ஆசிரியர் தான்  இந்த குற்றத்தை செய்தார் என  சிறுமி கூறியுள்ளதோடு, அவரை அடையாளமும் காட்டியுள்ளார். தகவல் அறிந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள், இன்று பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

அத்துடன், பள்ளிக்கு வெளியே, தவளங்குப்பம் சந்திப்பில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலுார் சாலையில் 05 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

06 year old student sexually harassed by teacher


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->