சிக்கிய கஞ்சா பண்டல்கள்! 5 பேர் கைது! 124 கிலோ கஞ்சா பறிமுதல்! - Seithipunal
Seithipunal


காரைக்குடி அருகே 124 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் அது தொடர்பாக 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த குன்றக்குடி பகுதியில் போலீசார் வழக்கம் போல் நெடுஞ்சாலை பகுதிகளில் ரோந்து பணியிலும் தீவிர வாகன சோதனையும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தொடர்ந்து விரட்டி சென்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பதிவு எண் இல்லா இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றி அதிரடி சோதனை நடத்தினர்.

பாதாரக்குடி அய்யனார் கோவில் செல்லும் மண்சாலையில் உள்ள சிறிய பாலத்தின் அருகில் பதிக்க வைத்திருந்த 2 கிலோ எடை உள்ள 64 பண்டல்களை காவல்துறை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட மொத்த கஞ்சாவின் எடை சுமார் 124 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துர்கா ராவ், சண்டிபாபு, ரம் அபிலேஷ் வர்மா, சுபாஷ், வித்யாசாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள், செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

124 kg ganja seized near Karaikudi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->