17 வயது மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..! - Seithipunal
Seithipunal


மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வருகிறார்.  கடந்த 12ம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பாதாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

அவர் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவியை தேடும் பணியில் ஈடுப்படனர். அப்போது, சந்தோஷ்  என்பவர் மாணவியை திருமண ஆசை காட்டி ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் மாணவியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 year old student abducted and sexually abused


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->