உஷார் ! தூங்கிக்கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்து குதறிய தெருநாய்!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு : அச்சரப்பாக்கம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஆங்காங்கே  நாய்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் சென்னையில் மட்டும் 8க்கும் மேற்பட்டோர்களை நாய்கள் கண்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வளர்ப்பு நாய் உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பதற்கு அனுமதி கட்டாயம் என்று அறிவித்தார்.

இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி  கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஆடு மற்றும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசிகுமார், சிவகாமி தம்பதியின் மகன் ஹரிஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களை தெருநாய் வீடு புகுந்து கடித்துப் குதறி உள்ளது. சிறுவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஒருத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விண்ணம்பூண்டி ஊராட்சியில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை பிடித்துள்ளனர்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys sleeping home street dog ​bite


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->