2 கோடி தங்கம் வைர நகைகள் திருட்டு: வீட்டு பணிப்பெண் கைது....... - Seithipunal
Seithipunal


 நுங்கம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் காணாமல் போன விவகாரத்தில், வீட்டில் பணிபுரிந்து வந்த ஓட்டுநர்க் கைது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டார்ப் புத்தாண்டை கொண்டாடுவதற்காகத் தமது சொந்த ஊருக்குச் சென்று வீடு திரும்பியுள்ளனார். அப்போது அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனார். அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள கபோர்ட் ,பீரோ ஆகியவற்றில் இரண்டு கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் திருடி உள்ளதாகத் தெரிய வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் ஜனவரி 3ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனை அடுத்து இந்தப் புகாரின் பேரில் தனிப்படைப் போலீசார் கார் ஓட்டுநரைக் கைது செய்தனர். விசாரணையில் இந்தக் கொள்ளையை திட்டமிட்டுத் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் கொள்ளைச் சம்பவத்தில் வீட்டில் வேலைச் செய்யும் பணி பெண்ணும், அவர்க் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சாந்தா, தீபக், பவித்ரா, ஷாலினி, கோராக் சாய் ஆகிய ஐந்து பேரையும் போலீசார்த் தேடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 crore gold and diamond jewellery theft Housemaid arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->