#தர்மபுரி || கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உட்பட 2 பலி..! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி உள்ளது

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சி.பள்ளிப்பட்டியில் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது வானவேடிக்கையின்போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு, திருவிழாவிற்காக பட்டாசு ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பொறி விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆகாஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநர் ராகவேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 killed in firecracker blast in temple festival in dharmapuri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->