அதிர்ச்சி.. சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. அப்படி வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று விமானங்களில் கடத்திவரப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பெண்கள் உள்பட 25 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதானவர்களிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 kilo gold seized in chennai airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->