திருச்சி விமான நிலையம்: ரூ.21.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூபாய் 21.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அவரது உடமைகளை சோதனை செய்ததில், மூன்று சாக்லேட் பவுடர் டப்பாக்களில் பவுடருடன் கலந்து 211 கிராம் தூய்மையான தங்கம் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் 175 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 21.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 laksh 55 thousand worth gold seized in Trichy airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->