சென்னை சென்ட்ரலில் 28.5கிலோ கஞ்சா பறிமுதல்!! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த வாராந்திர சிறப்பு ரயிலில் வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி விசாரித்தினர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த பாபி, முகமது மஜீத் மற்றும் காசார் கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ராஹிர் என்பது தெரியவந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்துவந்துள்ளனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம்  இருந்த 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார். இதேபோல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நெல்லை மாவட்டம் மேலசேவல் வடக்கு ராஜவீதியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் தூத்துக்குடி மணிகண்டன் என்பவரும் மொத்தமாக 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது சென்னை சென்ட்ரலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 kg ganja seized in Chennai Central


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->