உதவி கேட்டு செய்யல! சரமாரியாக வெட்டி கொலை! புஷ்நாதன் கொலை வழக்கில் 3 பேர் கைது!
3 people arrested in the murder of pushbanathan
கடலூர் மாவட்ட அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் கொலை வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வண்டிபாளையம் ஆலை காலனி பகுதியை சேர்ந்த புஷ்பநாதன் அதிமுக மாவட்ட பிரதிநிதி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வழிமுறைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தின சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் அவர்கள் கொலை செய்யப்பட்ட புஷ்பநாதன் செல்போன் ஆகியவற்றை காவல்துறை ஆய்வு செய்தனர்.
ஆடு திருடியவர்கள் தங்களை ஜாமினில் எடுக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீசாரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய மூன்று பேர் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர். புஷ்பநாதன் உதவி செய்யவில்லை.
தொடர்ந்து ஜாமனிலிருந்து வெளிவந்த இவர்கள் புஷ்பநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் மூன்று வாலிபர்களுக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நேதாஜி,அஜய், சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு சில தினங்களாக புஷ்பநாதனை நோட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கொலை செய்தது தனிப் படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து நேதாஜி, அஜெய் சந்தோஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
3 people arrested in the murder of pushbanathan