ஒரே நாளில் 37 தமிழக மீனவர்கள் கைது!! இலங்கை கடற்படை அட்டூழியம்!! - Seithipunal
Seithipunal


இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து நாட்களுக்கு பிறகு கடந்த 21 ஆம் தேதி மீன்பிடிக்க மீண்டும் கடலுக்குச் சென்ற நிலையில் ஜனசந்தி கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். 

அதேபோன்று ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை மீனவர்களை கோடிக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் தமிழக மீனவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்ஃபோன், பேட்டரி மற்றும் மீன்களைப் பறித்துக் கொண்டு விரட்டி அடித்தனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கொள்ளையர்களின் அராஜக போக்கால் தமிழக மீனவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்த வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 தமிழகம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு கடற்பரப்பில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்கரை கைது செய்ததோடு 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. அதற்கு முன்னதாக தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு 2 படகுகளையும் பறிமுதல் செய்திருந்தது. ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்ததோடு மற்றும் 5 விசைப்படகுகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

37 TamilNadu fishermen arrested by Srilankan navy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->