ராணிப்பேட்டை: சாலை தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்து - 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை தடுப்பின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அரசு மகளிர் கல்லூரி அருகே வேலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார், சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளாகி நின்றிருந்த பேருந்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையிலிருந்து அகற்றினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 injured in Govt bus crashes into roadblock in ranipet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->