#BREAKING || 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்! ED தீவிர விசாரணை.!
400 kg gold bars seized ED investigation
சென்னை அடுத்த குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகளை ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குன்றத்தூரில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தங்கக் கட்டிகள் வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
English Summary
400 kg gold bars seized ED investigation