பெரும் சோகம்.. லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவர் தனது மனைவி கவிதா மற்றும் உறவினர்கள் கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி மற்றும்  கவிதாவின் தம்பி மகள் லக்ஷனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு காரில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பழங்குடி பாளையம் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டைனர் லாரி பின்புறத்தில் கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியவர்களை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் ஓட்டி வந்த ரவி மற்றும் அவரது மனைவி கவிதா 4 வயது குழந்தை லக்ஷனா ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ரவியின் மனைவி கவிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த ரவி மற்றும் நான்கு வயது குழந்தை லக்ஷனா ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரமத்திவேலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஓரத்தில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people died in car accident at namakkal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->