சென்னையில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் - போலீசார் அதிரடி..! - Seithipunal
Seithipunal


சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில், வீட்டில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, முகமது ரசூல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? எதற்காக கடத்தப்பட்டது என்ற பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

960 kilo red wood seized in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->