நெல்லையில் அதிர்ச்சி: நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் 05 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்..!
A gang of 05 people attacked Nanguneri school student Chinnadurai again
கடந்த 2023-ஆம் ஆண்டு நான்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரையை அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று குணமடைந்து தனது படிப்பை தொடர்ந்த சின்னதுரை, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 78% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில், மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காயமடைந்துள்ள சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்திய 05 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A gang of 05 people attacked Nanguneri school student Chinnadurai again