திண்டுக்கல் : டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம் பட்டியைச் சேர்ந்தவர் காசிவிசுவநாதன் இவர் நிலக்கோட்டை சுற்றியுள்ள தென்னை மட்டைகளை வாங்கி கயிறு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அணைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு விளாம்பட்டி மட்டப்பாறை சாலையில் பாண்டியராஜபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி டயர் வெடித்தது. இதில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் மேல் புறத்தில் உட்கார்ந்திருந்த ஆவாரம்பட்டியை சேர்ந்த மணி, லட்சுமி, செல்வி மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் லாரி ஓட்டுநரான காசிவிசுவநாதன் எந்தவிதமான காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A lorry overturned in a tire explosion


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->