அந்த மூன்று குரங்கு கோமாளிகளுக்கு இதே வேலை! கிழித்தெடுத்த நயன்தாரா! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் காதல் வாழ்க்கையை மையமாக கொண்டு, ஆவணப்படம் ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.  

இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்க காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் எழுதியிருந்தார். 

இந்த விவகாரத்தில் யூடியூப்பில் சிலர் நயன்தாராவுக்கு எதிராகவும், தனுஷுக்கு ஆதராவாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.  

இந்த நிலையில், நடிகை நயன்தாரா ஒரு நேர்காணல் ஒன்றில் மறைமுகமாக யூடியூப் சேனல் ஒன்றை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

"யூடியூப்பில் ஒரு மூன்று பேர் உள்ளனர். அவர்கள் வெளியிடும் வீடியோக்களில் பெரும்பாலானவை என்னை குறித்தே இருக்கும். ஏனெனில் என்னை பற்றி பேசினால் வீவ்ஸ் அதிகரிக்கும், அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள். 

பொய் பேசும், தவறானதை கேட்கும், தவறானதையே பார்க்கும் மூன்று குரங்குகளாக அந்த 3 பேர் உள்ளனர். அவர்கள் கோமாளிகள். என்னை பற்றி பேசினால் பிரபலம் ஆகலாம் என்ற எண்ணமே அவர்களை இப்படி பேச வைக்கிறது" என்று நடிகை நயன்தாரா விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Nayanthara condemn to valipechu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->