தமிழ்நாடு ரவுடிகளின் ராஜ்ஜியம் ! கொள்ளை அடிப்பதே திமுகவின் திட்டம்! - எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சேலம் : எந்தெந்த துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் இந்த ஆட்சியின் திட்டமாக உள்ளது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தி அவர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படவிடாததால் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது. அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது. முதலமைச்சர் சிறப்பதாக செயல்பட்டு இருந்தால் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என காட்டமாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த துறைகளில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதை இந்த ஆட்சியின் திட்டம் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami pressMeet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->