அக்கரை - மாமல்லபுரம் இடையேயான சுங்கசாவடியில் கட்டணம் திடீர் உயர்வு!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல் படுத்துவது வழக்கமான ஒன்று. 

ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம், தேர்தல் காரணமாக தடைப்பட்டதால் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது. 

இந்நிலையில் அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்க சாவடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. 

இந்த கட்டண உயர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ரூ. 1 முதல் ரூ. 68 வரையும் இலக்கு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

சென்னை - மாமல்லபுரம் இடையேயான போக்குவரத்து அதிகரித்ததால் 2018 ஆம் ஆண்டு அக்கரை மாமல்லபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akkarai Mamallapuram between toll fees increase 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->