மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள்: உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

கங்கை கொண்ட சோழன், மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா வரும் ஆக. 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரின் அந்த அறிவிப்பில், மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி நிகழாண்டு ஆக.2-ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஆக.17 ஆம் தேதி முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது. ஆக.2-ஆம் தேதி அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும்" என்று அந்த அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Local Holyday


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->