கொடூரம்! குடிவெறியில் மூத்தமகளை தண்ணீரில் தள்ளி தந்தை செய்த கொடூர செயல்! - Seithipunal
Seithipunal


கோவையில் மகளை தண்ணீர் தொட்டியில் வீசி கணவருக்கு கொலை செய்ததால், அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஒன்றிபுதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி புஷ்பா இவர்களுக்கு ஹர்ஷினி, சிவானி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தங்கராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கடந்த 4 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் புஷ்பாவிடம் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சகித்துக் கொண்டு வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் அவரிடமும் மது குடிக்க பணம் கேட்டு தங்கராஜ் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் தங்கராஜ் நேற்று காலை  அக்கம்பக்கத்தினரிடம் சென்று தண்ணீர் தொட்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறை மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை சோகம் இல்லாமல் சுற்றித்திரிந்த தங்கராஜை பிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுகுடும் உண்மையில் வெளிவந்துள்ளது.

குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் புஷ்பிராவிடம் சண்டை போட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மூத்த மகள் ஹர்ஷினியை வீட்டின் பின்புறம் உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துள்ளார்.

மகள் தண்ணீர் தொட்டில் பிணமாக இருப்பதை கண்டு அழுது கொண்டிருந்த மனைவி இரண்டாவது மகள் சிவானி உடன் அதே தன்னைத் தொட்டில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை, தற்கொலைக்கு தூண்டுதல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ather who killed his daughter by throwing her into a water tank in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->