சென்னையில் பெரும் பதற்றம்.. பாஜக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பாஜக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த சங்கர் நேற்று இரவு சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று வழிமுறைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இதனையடுத்து உடனடியாக காரில் இருந்து இறங்கி தப்பி ஓடுவதற்கு முயன்ற பாஜக நிர்வாகி சங்கர மர்மகும்பல் துரத்தி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் பாஜக நிர்வாகி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Admin Sankar in killed in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->