கிருஷ்ணகிரி : நீச்சல் பழக சென்ற சிறுவன் - கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி : நீச்சல் பழக சென்ற சிறுவன் - நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை அருகே உள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பன் மகன் இளவரசன். இவர் ராயக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இளவரசன் தனது தாயார் சாந்தி மற்றும் தனது கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களுடன் அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றுள்ளார்.

அங்கு சிறுவர்கள் அனைவரும் இடுப்பில் கேன் கட்டிக்கொண்டு நீச்சல் பழகிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இளவரசன் இடுப்பில் கட்டிருந்த கேன் அவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயன்றனர். 

கிணறு ஆழமாக இருந்ததால் சிறுவனை அவர்களால் மீட்க முடியவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், ராயக்கோட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அவர்கள் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

அதன் பின்னர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy died for drowned well in krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->