நாட்டாமை மாற்றுவது தொடர்பாக தகராறு.. சொந்த தம்பியை கொலை செய்த அண்ணன்..! - Seithipunal
Seithipunal


சொந்த தம்பியை அண்ணன் மற்றும் அவரது மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் , சிவனாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் அந்த கிராமத்தின் நாட்டாமையாக இருந்து வருகிறார். அவரது அண்னன் பாண்டியன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவதன்று, பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ் குமார் ஆகியோர் செந்தில் குமாரை கத்தியால் குத்தினர். இதில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brother killed His younger Brother Near Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->