நிலத்தகராறு: சித்தப்பாவை அடித்துக் கொன்ற அண்ணன் மகன்.!
Brothers son murder his fathers brother by beating him in salem
சேலம் மாவட்டத்தில் நிலத் தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொன்ற அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கோவிந்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பூசமுத்து (85). இவருக்கும், இவரது அண்ணன் முத்துசாமிக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பூசமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வந்த முத்துசாமியின் மகன் ராஜி (52), நில தகராறு தொடர்பாக பூசமுத்துவிடும் பேசியுள்ளார்.
அப்பொழுது இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜி, பூசமுத்து வைத்திருந்த கைத்தடியை பிடுங்கி பூசமுத்துவை சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பூசமுத்துவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பூசமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூச முத்துவை அடித்துக் கொன்ற ராஜியை கைது செய்தனர்.
English Summary
Brothers son murder his fathers brother by beating him in salem