திருமதி ஆம்ஸ்ட்ராங்! பெயரை மாற்றிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்! காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த படுகொலை சம்பவத்தில் தற்போது வரை 17க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று முக்கிய புள்ளிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து, முன் விரோதம், தொழில் போட்டி என்ற பல்வேறு கோணங்களில் இந்த வழக்கானது நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளராக அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஒரு வேண்டுகோள் ஒன்றை தனது கட்சியினருக்கு விடுத்துள்ளார்.

அதில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்ற தனது பெயரை இனி பயன்படுத்த வேண்டாம். அதற்கு மாற்றாக திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள். ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இதுபோன்று மாற்றி உள்ளேன் என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தன் மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள திருமதி ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு இயக்குனர் பா ரஞ்சித் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP LEADER Mrs Armstrong


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->