பேருந்து கட்டண உயர்வு; நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கட்டணம் நிர்ணயிக்க உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போக்குவரத்து துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த உயர்மட்டக் குழுவை நியமித்து 2024 டிசம்பர் 06ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் ஆலோசித்து, நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க, போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus fare hike Decision


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->