சென்னையில் ஆன்லைனில் கஞ்சா விற்பனை.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் போலீஸ் நடத்திய சோதனையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 3,546 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் கஞ்சா பொட்டலங்கள் உடன் வந்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சொன்ன இடத்தில் கஞ்சாவில் கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கஸ்டமர் போல ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்த போலீசார் கஞ்சா சப்ளை செய்ய வந்த என்பவரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹரி ஜாம்பஜார் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis sale online in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->