காஞ்சிபுரம்.! கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


காரில் கஞ்சா கடத்திய வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக கஞ்சா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காரில் இருந்த இரண்டு பேரை விசாரணை செய்ததில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis smugglers arrested in kanchipuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->