#புதுக்கோட்டை || கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணவன்-மனைவி உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(50). இவரது மனைவி கல்யாணி(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை விராலூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பேருந்திற்காக கணவன்-மனைவி இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கணவன்-மனைவி மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

மேலும் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த கணவன் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car accident in Pudukkottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->