வேப்பூர் அருகே ஆவட்டி கூட்ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


‌வேப்பூர் அருகே ஆவட்டி கூட்ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆவட்டி கூட்ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், முன்னால் சென்ற கார் மீது வேகமாக வந்த அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car and govt bus accident in Avatti X Road 4 peoples death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->