#BREAKING :: சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
Chennai Collector order Half day holiday for all schools in Chennai
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலெழுத்து சுழற்சி காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 26 மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இருப்பினும் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.12) மட்டும் பிற்பகலுக்கு பிறகு அரை நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Collector order Half day holiday for all schools in Chennai