20 ஆக உயர்ந்த சென்னை மாநகராட்சி மண்டலங்கள்; முதலமைச்சர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-இல் இருந்து 20ஆக உயர்த்த உதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. ஏற்கெனவே இருந்த 15 மண்டலங்களில் மணலி மற்றும் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது.

அதன்படி, 14 மண்டலங்களாக இருந்த சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லையில், தற்போது கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி -சோழிங்கநல்லூர் ஆகிய 06 மண்டலங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

இதனால், தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நிர்வாக வசதி போன்ற காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Corporation zones increased to 20


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->