சென்னை | மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்! - Seithipunal
Seithipunal


“குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைதிறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. 

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. 

அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. மேலும் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை.

மேலும் 8,734 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 27.05.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் கடந்த நான்கு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12,974 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.13,42,45,600/-அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. 

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம், அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Drunk and Drive Case 31 may 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->