சென்னை மெரினாவில் வெயில் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினாவில் இன்று நடந்த விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு பார்வையிட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விமான சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் சுமார் 4 மணி நேரம் அந்தப் பகுதியிலேயே சிக்கித் தவித்தனர்.

40க்கும் மேற்பட்ட மக்கள் மயக்கம் அடைந்து சாலைகளிலேயே சுருண்டு விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து பலரும் வீடு திரும்பியதாக தெரிய வருகிறது.

இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், 4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Marina Air Show 2024


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->